புறக்கோட்டையில் சிக்கிய காத்தான்குடி கொள்ளையர்கள்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் கொழும்பு புறக்கோட்டையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து கைதானவர் கொடுத்த தகவலின் பேரில் கொழும்பின் பிரபல நகைக்கடை உரிமையாளருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 16 பவுண் தங்கம், கையடக்க தொலைபேசி உட்பட ஆவணங்கள் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கடந்த மாதம் 4ம் திகதி காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து 55000 ரூபாய் பணம் மற்றும் 23 பவுண் தங்கஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் பிரதான சந்தேக நபர் புறக்கோட்டையில் பதுங்கியிருந்த நிலையில் நேற்று மாலை கைது செய்தனர்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் பேரில் கொள்ளையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்த வெள்ளவத்தை நகைக்கடையிலிருந்து 16 பவுண் எடைகொண்ட உருக்கிய தங்கம் மீட்கப்பட்டு கடை உரிமையாளரும் கைதானார்.

இந்நிலையில் குறித்த கொள்ளைக்கு உதவியதாக கருதப்படும் மேலும் ஒருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டதுடன் கொழும்பு பிலியந்தலையில் 3 இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை குறித்த கொள்ளை தொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டுவரும் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் விசாரணையின் பின்ன்னர் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.