39 சீனப் பிரஜைகள் உள்ளிட்ட 141 பேர் நாட்டிற்கு வரவுள்ளனர்!

இலங்கையர்கள் உள்ளிட்ட 141 பேருடன் சீனாவிலிருந்து 03 விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அந்நாட்டிலிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது நாடுகளை நோக்கி பயணங்களை ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில், நேற்று வுஹானிலிருந்து 33 இலங்கை மாணவர்களை உள்ளடக்கிய விமானமொன்று நாட்டை வந்தடைந்திருந்தது.

இதனயடுத்து இன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 141 பேரை ஏற்றிய மூன்று விமானங்கள் சீனாவிலிருந்து நாட்டுக்கு வருவதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் மேற்படி விமானத்தில், 39 சீனப் பிரஜைகளும் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.