கைது செய்யப்பட்டவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் மீட்பு!!

விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள், ஒரு மெமரிக் காட், ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்


கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்திய தேடுதலின்போதே கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வு அலுவலகம் வவுனியா, மனித உரிமை ஆணைக்குழு வவுனியா, மாவட்ட நீதிமன்று கிளிநொச்சி, பிரதேச செயலாளர் கரைச்சி கிளிநொச்சி, பிரதேச செயலாளர் வவுனியா போன்ற விபரங்களையுடைய சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட இறப்பர் முத்திரைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மற்றும் சான்றுப் பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் சற்றுமுன்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.