தேசியகீத புறக்கணிப்பு தொடர்பில் விக்கி வெளியிட்ட கருத்து!
நடைபெறவிருக்கும் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருப்பது , தமிழ் மக்களை அரசாங்கம் இந்நாட்டின் அங்கமாக ஏற்கவில்லை என்பதையே காட்டுகின்றதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ, அல்லது அவர்களின் மொழி, கலாசாரம், பூர்வீகம் என்பவற்றை ஏற்றுக்கொள்வதாகவோ அரசாஙகம் தயார் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த ஐந்து வருடக் காலத்தில் சிங்கள மொழியைத் தொடர்ந்து தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில், சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை இசைப்பதென்றும் எனினும் தேசிய கீதம் இசைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழியில் பாட முடியும் எனவும் கூறப்பட்டிருப்பதானது, ஏதோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் சலுகையைப் போன்றே தெரிகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் உண்மையான புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 72ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்த்துள்ள கருத்து தொடர்பில் அவர் இவற்றினை கூறியுள்ளார்.
நாட்டில் இதுவரை தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்பட்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்பட்டதாக கருதப்பட்டது.
ஆனால் தற்பொழுது சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என கூறுவதன் மூலம் சிங்கள மேலாதிக்கத்தையே அது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரவர் தங்கள் தாய்மொழியில் அதனை பாடமுடியும் என்று கூறுவது மொழிக்கு தரப்பட்ட சலுகையாகவே எண்ணத் தோன்றுகின்றதாகவும் கூறிய அவர், இதன் மூலம் குறித்த நபர் வாய்மூடி மெளனமாகவும் கூட இருக்கலாம் என எண்ணத்தோன்றுவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அத்துடன் தமிழ் மக்களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ, அல்லது அவர்களின் மொழி, கலாசாரம், பூர்வீகம் என்பவற்றை ஏற்றுக்கொள்வதாகவோ அரசாஙகம் தயார் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த ஐந்து வருடக் காலத்தில் சிங்கள மொழியைத் தொடர்ந்து தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில், சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை இசைப்பதென்றும் எனினும் தேசிய கீதம் இசைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழியில் பாட முடியும் எனவும் கூறப்பட்டிருப்பதானது, ஏதோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் சலுகையைப் போன்றே தெரிகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் உண்மையான புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 72ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்த்துள்ள கருத்து தொடர்பில் அவர் இவற்றினை கூறியுள்ளார்.
நாட்டில் இதுவரை தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்பட்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்பட்டதாக கருதப்பட்டது.
ஆனால் தற்பொழுது சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என கூறுவதன் மூலம் சிங்கள மேலாதிக்கத்தையே அது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரவர் தங்கள் தாய்மொழியில் அதனை பாடமுடியும் என்று கூறுவது மொழிக்கு தரப்பட்ட சலுகையாகவே எண்ணத் தோன்றுகின்றதாகவும் கூறிய அவர், இதன் மூலம் குறித்த நபர் வாய்மூடி மெளனமாகவும் கூட இருக்கலாம் என எண்ணத்தோன்றுவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo