திருகோணமலையில் லொறி தீப்பற்றி சாரதி மரணம்!!

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்று தீப்பற்றி எரிந்ததில், அதன் சாரதி தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாகம் பொலிஸார் தெரிவித்தனர்

திருகோணமலை கன்னியா வீதி மிகிந்த புரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய கந்தசாமி லோகநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம் பாலம்பட்டாறு பிரதேசத்தில் உள்ள வீதிக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி இளைப்பாறும் இடத்தில் குறித்த லொறி எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதிலிருந்து சாரதிக்கு பின்னால் உள்ள இருக்கையில் சாரதியின் உடல் எரிந்து கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.