திருகோணமலையில் 8 பேர் கைது!


திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதியில் இன்று அதிகாலை எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.



புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25, 30, மற்றும் 40, 45, வயது உடையவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கந்தளாய், மாத்தறை மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

அவர்களிடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் சந்தேகநபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.