யாழ் . சாவகச்சேரியில் விபத்து - முதியவர் சாவு!

யாழ். சாவகச்சேரி அரசடி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளதோடு, இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.


இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

காரும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.