தனியார் ஒருவருக்கு 140ஏக்கர் காணி வழங்குவதை கண்டிக்கிறோம்!

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசம் அம்பன் கொட்டோடை கடற்கரையில் இறால் வளர்ப்பு எனும் பெயரில் தனியார் ஒருவருக்கு 140 ஏக்கர் காணியை வழங்குவதை பருத்தித்துறை பிரதேச சபை வன்மையாக
கண்டித்துள்ளதுடன் அவ்வாறு காணியை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறும் கோரி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கடிதம் அனுப்புவதெனவும் சபையில் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய அமர்வு பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் இன்று காலை 9:00 மணிக்கு தவிசாளர் அ.ச.அரியகுமார் தலைமையில் இடம் பெற்றது இவ் அமர்விலேயே இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.மேற்படி அமர்வு  இரண்டு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் முதலாவதாக சென்ற கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு முன் மொழிந்து வழி மொழிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து வீதிகளில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதாகவும் அதனை திருத்தியமைக்க இதுவரை ஏற்பாடுகள் மேற்கொள்ளவில்லை என உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேள்வி எழுப்பியபோது மின்சார சபை  மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் தாம் திருத்தம் செய்ய மின்சார சபையிடம் எழுத்து மூலம் விண்ணப்பித்த போதும் அவர்கள் அக்கறை கொள்வதில்லை என்றும் மாவட்ட செயலர் தலமையில் குழு அமைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் தவிசாளர் தெரிவித்தார். சபைக்கான கொடி இதுவரை உருவாக்கப்படவில்லை என்றும் அதனை உருவாக்க சபையிடம் அனுமதி கோரப்பட்டது.அதற்காக பொது அறிவித்தல் மூலம் கோரி அவர்கள் தருகின்றன வடிவங்கள் ஆலோசனைக்கு அமைவாக  ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் 2019 ம் ஆண்டில் நிறைவேற்றப்படாத அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட இரண்டு வேலைகளில் கண்ணகி அம்மன் கோவில் வீதியை அதைவிட பழுதடைந்துள்ள வீதி ஒன்றினை மாற்றி அமைக்க கோருவது என்றும் மற்றைய வீதி அமைப்பதற்கு அனுமதிப்பது என்றும், மலக் கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுவதாகவும் அவ்வாறு இனிவரும் காலங்களில் இடம் பெற்றால் கலி பவுசர் வாகனம் கொழுத்தப்படும் என தனக்கு மக்கள் அறிவித்ததாக சபை உறுப்பினர் திரு.தர்சன் சபையில் தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த தவிசாளர் தாம் ஒரு மாதமாக மலக்கழிவு அகற்றுவதை நிறுத்தியுள்ளதாகவும், இலங்கை முழுவதும் இவ்வாறு பாதுகாப்பு அற்ற முறையிலேயே கழிவகற்றல் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார். மருதங்கேணி இறைச்சிக் கடை இது வரை எவரும் ஏலம் எடுக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டதுடன், தொழில் நிலையங்களை பதிவு செய்வதற்காக கட்டணம் தொடர்பிலும் ஆராயப்பட்டு வர்த்தமானியில் குறிப்பிட்ட பெறுமதிகளை அறவிட சபை அனுமதி வழங்கியதுடன், வடமராட்சியில் சக்கோட்டை, வல்லிபுர ஆழ்வார் ஆலய வளாகம் குருக்கட்டு பிள்ளையார் ஆலய வளாகம் , போன்ற இடங்களில் அமைக்கப்பட்டவை 5G அலைக்கதிர் கோபுரம் அல்ல என்று அந்த நிறுவனம் சபைக்கு அறிவித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது
Blogger இயக்குவது.