சிறுமியை க் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் கைது!

15 வயது சிறுமி ஒருவரை வீட்டாருக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் திருகோணமலை வான் எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.


திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வான் எல பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இராணுவ சிப்பாய் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளதாக சிறுமியின் பாட்டனார் பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உடனடியாக அனுராதபுரம்- மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையாக சிறுமியை நிறுத்தி வைத்துக்கொண்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் மிகிந்தலை- மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வான் எல பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.