கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞனுக்கு பலத்த காயம்!!!!

வாழைச்சேனை ஓட்டுமாவடியில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இளைஞன் ஒருவன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.



இந்த விபத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வீதியிலே இடம்பெற்றுள்ளது.

வீதியில் திடீரென்று குறுக்கே சென்ற பெண்ணுக்கு வழி விட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தலைக்கவசம் அணிந்திருந்ததுடன், கையில் மேலதிக தலைக்கவசம் ஒன்றினை கொண்டு சென்ற நிலையில் வீதிக்கு குறுக்கே சென்ற பெண்ணுக்கு வழி விடும் போது சைக்கிள் திசைமாறி மின் கம்பத்தில் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.