ஜனாதிபதி தலதா மாளிகையில் சிறப்பு பூஜை வழிபாடு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.


தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி,தேரரின் நலன் விசாரித்தறிந்துள்ளார்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்துள்ளார்.

ஜனாதிபதி அஸ்கிரிய ஸ்ரீ சந்ராநந்த பௌத்த வித்தியாலயத்தில் ரங்கிரி தம்புலு மகா விகாரையின் விகாரதிபதி, கண்டி அஸ்கிரி மகாவிகாரையின் சிரேஷ்ட காரக்க சங்கசபிக்க, கலாநிதி கொடகம மங்கள நாயக்க தேரரை சந்தித்தார்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி நாயக்க தேரர் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.