கொழும்பில் அதிநவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது!!

கொழும்பு நகரின் காற்றின் தரத்தை அளவிடுவதற்கான நவீன கருவியொன்று இன்று பொருத்தப்பட்டுள்ளது.


கொழும்பு நகர சபையுடன் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.

நவீன இயந்திரத்தின் ஊடாக காற்றின் தரத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தலாம் என பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

இந்த இயந்திரத்தின் மூலம் கொழும்பு மாநகர சபையிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்திற்குட்பட்ட காற்றின் தரத்தை கண்டறிய முடியும் என வைத்திய அதிகாரி இதன்போது குறிப்பிட்டார்.

Blogger இயக்குவது.