எதிர்கால அரசியல் நகர்வு குறித்து மைத்திரி கருத்து!!

எதிர்கால அரசியல் வாழ்க்கையை பொலன்னறுவை மாவட்டத்திற்கே பயன்படுத்த விரும்புகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் ஊடகங்கள் ஊடாக  சிலர் என்மீது சேறு பூசினார்.

ஆனாலும் பொலன்னறுவை மக்கள், அவ்விடயங்கள் அனைத்தும் பொய் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள்.

அந்தவகையில்,நானும் பொலன்னறுவை மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.

எனவே இனிவரும் காலங்களில் எனது அனைத்து நேரத்தையும் பொலன்னறுவை மாவட்டத்திற்காகவே செலவிட தீர்மானித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.