சூர்யாவின் அடுத்த படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!!

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுக்கு பாடலாசிரியர் ஏகாதசி சொந்தம் கொண்டாடுகிறார். இவர் ஏற்கனவே தருண்கோபியை வைத்து உருவாக்கி வரும் படத்திற்கு ‘அருவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் இந்த டைட்டிலில் அவர் வெளிநாடுகளில் படத்தின் பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டதாகவும் எனவே எந்த காரணத்தை முன்னிட்டும் ’அருவா’ டைட்டிலை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறி இருப்பதாகவும் தெரிகிறது இதனை அடுத்து சூர்யா-ஹரியின் திரைப்படத்திற்கு டைட்டில் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ’அருவா’ படத்தின் டைட்டில் தனுஷ் நடித்த வேங்கை, சிம்பு நடித்த கோவில், விஷால் நடித்த பூஜை உள்பட ஒரு சில படங்களுக்கு ஹரி வைத்துவிட்டு அதன் பின்னர் டைட்டிலை மாற்றினார் என்று கூறப்படும் நிலையில் தற்போது சூர்யாவின் படத்திற்கும் ’அருவா’ டைட்டில் வைக்கப்பட்டு பின்னர் மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.