உயிராபத்துகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்- அர்ஜூன!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான சூழ்நிலையினை கருத்திற் கொள்ளாமல் தேர்தலை நடத்தி, அதனூடாக உயிராபத்துகள் ஏதும் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தற்போதைய அரசாங்கமும் சகல அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நோய் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் குறித்து இதுவரை எவரும் ஆழ்ந்து சிந்திக்கவில்லை. அந்தவகையில்  அரசியல்வாதிகளை விடவும் நாட்டு மக்கள் அதன் பாரதூரதன்மையை நன்கு அறிந்துள்ளார்கள்.

இதேவேளை ஜனாதிபதியால் இது குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்படுமென  எதிர்பார்க்கின்றேன். ஏதேனும் உயிராபத்துகள் ஏற்படுமாயின் அதற்கான அனைத்து பொறுப்புகளையும் அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும்.

அனைவருக்கும் தேர்தல் ஒன்றின் தேவை உள்ளது. எனினும்  உயிராபத்துகள் ஏற்பட்டால் பொது மக்கள் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.