உதயங்க வீரதுங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின்  விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார்.


இதனை அடுத்து பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் அவரின் விளக்கமறியல் இன்றுவரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று(புதன்கிழமை) மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.