நாளை முதல் கண் – பல் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகள் மட்டும்-அனில் ஜாசிங்க!!

கொழும்பில் உள்ள கண் மற்றும் பல் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


இந்த நடவடிக்கை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.

கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.