துப்பாக்கிச்சூட்டில் மூன்று சிறைக்கைதிகள் பலி

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். அதனைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் சிறைக்கூண்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கான சிறைக்காவலர்களோ அதிகாரிகளோ அங்கு காணப்படாத நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாது கலவர நிலமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியவந்துள்ளது. மேலும் இங்கு தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் என்ன செய்வதென்று அறியாது கலவரமான நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Blogger இயக்குவது.