கொரோனா - 08 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட இலங்கையர்களில் 08 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.


அவர்களில் 07 பேர் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையிலும், ஒருவர் வெலிகந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கூறினார்.

அத்துடன் எவ்வாறாயினும் இன்று மருத்துவ அறிக்கைகள் வெளிவந்தபின் தொற்று எவருக்கும் ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும் என்றும் அவர் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.