யாழில் அகப்பட்ட மட்டக்களப்பு தொழிலாளர்களின் அவலம்!!

யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த தொழிலாளர்கள் தாம் உணவின்றி சிரமப்படுவதாக உதவி கோரியுள்ளனர்.


யாழ் நகரிலுள்ள செல்வா தியேட்டரில் தாம் 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் , கடந்த 3 தினங்களாக போதிய உணவின்றி தாம் சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தொழில் நடவடிக்கைகளிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த 14 பேரே இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து வசதிகளில்லாததால் ஊர் திரும்ப முடியாமலுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் , அன்றாட தொழிலாளர்களான தாம் உணவுப் பொருள்களின்றி சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.