நுண்ணுயிர்கொல்லி - கவிதை!!

நுண்ணுயிர் தான் என்று
எண்ணியவாரெல்லால் இருந்து விடாதீர்கள்

கண்ணுக்கு தெரியாத கழுகிற்கு இரையாகி இறந்துவிடாதீர்கள்

கைலாகு செய்யும் கலாச்சாரத்தை கொஞ்சம் கைவிடுங்கள்...


கைகூப்பி வணக்கம் சொல்லும் பாரம்பரியத்தை கையில் எடுங்கள்...

மஞ்சள் நீர் தெளித்து மாவிலை தோரணம் கட்டுவது போன்ற மரபுகளின் மகத்துவங்களை இப்போதாவது உணருங்கள்

நெஞ்சம் ஏற்பதையெல்லாம் உண்ணாமல் உணவே மருந்தென்று சிந்தித்து உண்ணுங்கள்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது உண்மைதான்

தற்போது சிரிக்கும் போதும் சிந்தித்தால் தான் ஆயுளும் நீளும்

அச்சப்படத் தேவையில்லை
அவதானமாய் இருக்கலாம்

பதற்றப்பட தேவையில்லை
பாதுகாப்பாய் இருக்கலாம்

விலகியிருந்தால் மட்டுமே கொரோனாவை
விரட்ட முடியும்

வீட்டில் அடங்கியிருந்தால் மட்டுமே அந்த கொடியவனை அண்டத்தை விட்டு அகற்ற முடியும்

இயன்றவரை இன்றைய பொழுதில் சிந்தித்தால்

முடிந்தவரை நாளைய விடியலை நமக்கானதாய் மாற்றலாம்

நம்புங்கள் நாளை நமதே...

வரிகள்
குலேந்திரன்
மயிலந்தனை....

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.