எட்டு வய­து சிறுமியை சீரழித்த 68 வயது கிழவன்

எட்டு வய­து பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­கத்தில் 68 வய­து­டைய நபர் ஒரு­வர் கைதாகியுள்ளார் .


கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபரின் வீட்­டுக்குச் சிறுமி சென்­றி­ருந்த சந்­தர்ப்­பத்தில் அச்­சி­று­மியை ஏமாற்­றியே சந்­தேக நபர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இது தொடர்பில் சிறுமி தனது தாயிடம் கூறி­ய­தை­ய­டுத்து தாய் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்தே குறித்த சந்­தேக நபர் நேற்று முன் தினம் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மேலும் பாதிக்­கப்­பட்ட சிறு­மியை வைத்­திய பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்ள தங்கொட்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Blogger இயக்குவது.