மனைவி தாக்கியதில் கணவா் பலி!!

சித்ரதுா்கா பல்லாளசந்திரா பகுதியைச் சோந்தவா் ஜெயசந்திரா நாயுடு (55). இவரது மனைவி ருக்மணி.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை தோட்டத்துக்கு சென்ற ருக்மணி, காய்ந்திருந்த தென்னை ஓலைகளை கிணற்றுக்கு அருகே குவித்து தீ மூட்டியுள்ளாா். அப்போது, தீயில் பம்புசெட்டிற்கு கொடுத்திருந்த மின் இணைப்பு கம்பி சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயசந்திராநாயுடு அங்கு வந்து ருக்மணியுடன் தகராறில் ஈடுபட்டாா்.
இதில் ஆத்திரமடைந்த ருக்மணி, அருகில் கிடந்த தென்னை மட்டையால் ஜெயசந்திரா நாயுடுவை தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ஜெயசந்திரா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீராமபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.