கொழும்பில் 10 கொரோனா நோயாளர்கள்!

இலங்கையில் கொழும்பிலேயே மிக அதிகமான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவுக்குவந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு வெளியிட்டது.
இதன்படி மொத்தமாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 44 கொரோனா நோயாளர்கள் உள்ளனர்.
மேலும் புத்தளம் மாவட்டத்தில் 32 பேரும், களுத்துறையில் 25 பேரும், கம்பஹாவில் 13 பேரும் கொரோனா தொற்றாளார்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.