தமிழகம்: 10,000த்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாள்தோறும் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று அது 447 ஆக குறைந்தது. இன்றும் அதே அளவிலான எண்ணிக்கையில்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறை இன்று (மே 15) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று புதிதாக 434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் மாலத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல குஜராத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 309 பேருக்கும் திருவள்ளூரில் 21, செங்கல்பட்டில் 20, காஞ்சிபுரத்தில் 11 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளதாகவும், “இவர்களில் 6,642 பேர் ஆண்கள், 3,463 பேர் பெண்கள், 3 பேர் திருநங்கையர்கள். இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,435 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரை இன்று 11,672 பேருக்கும், இதுவரை 3,03,104 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 38 அரசு ஆய்வகங்களிலும், 20 தனியார் ஆய்வகங்களிலும் என 58 மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழில்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாள்தோறும் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று அது 447 ஆக குறைந்தது. இன்றும் அதே அளவிலான எண்ணிக்கையில்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறை இன்று (மே 15) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று புதிதாக 434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் மாலத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல குஜராத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 309 பேருக்கும் திருவள்ளூரில் 21, செங்கல்பட்டில் 20, காஞ்சிபுரத்தில் 11 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ளதாகவும், “இவர்களில் 6,642 பேர் ஆண்கள், 3,463 பேர் பெண்கள், 3 பேர் திருநங்கையர்கள். இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,435 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரை இன்று 11,672 பேருக்கும், இதுவரை 3,03,104 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 38 அரசு ஆய்வகங்களிலும், 20 தனியார் ஆய்வகங்களிலும் என 58 மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழில்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo