பழ. நெடுமாறன் ஐயா குடும்பத்துடன் வீட்டில் சுடரேற்றி வீரவணக்கம்

தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் நாளின் 11-ஆவது ஆண்டு நினைவேந்தலை இன்று குடும்பத்துடன் வீட்டில்  சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்  பழ. நெடுமாறன் ஐயா  அவர்கள்.11 வருடங்கள் கடந்த நிலையிலும். இறுதிக்கட்ட போரிலே படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவருக்குமான நீதி இதுவரை கிடைக்கவில்லை. மாறாக நல்லாட்சி அரசும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும்  தமிழ் மக்களுக்கான நீதியை மழுங்கடித்திருக்கின்றார்கள்.


அத்துடன் இராணுவத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பலர் இன்று சரணடைந்த நிலையில் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தமது உறவுகளுக்காக பலவருடங்களாக வீதிகளிலே இருந்து போராடுகின்றார்கள். எனவே சர்வதேச சமூகம் கோமாவில் இருந்து மீள வேண்டும். எமது மக்களுக்கு ஒரு நீதியை பெற்றுகொடுக்க வேண்டும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.