பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பாதுகாப்பு ஒத்திகை!

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அவசர நிலை ஏற்பட்டால் முன்னெடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்காக பாராளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று கூட்டு பாதுகாப்பு ஒத்திகை இடம்பெற்றதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,
பாதுகாப்புப் படைகள் ஒன்றிணைந்து பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று முன்னெடுத்திருந்த கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகை வெற்றிகரமாக முடிவடைந்தது.
ஒன்றிணைந்த கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் முன்னெடுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை, கொழும்பு தீயணைப்பு சேவைப் பிரிவினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பாதுகாப்பு முகவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அவசர நிலை ஏற்பட்டால் முன்னெடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அடையாளம் காண்பது இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாக அமைந்தது.
கூட்டுப்பயிற்சியின் இறுதியில் தீயணைப்பு சேவைப் பிரிவினரின் பயிற்சியும் இடம்பெற்றது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் அனுமதியுடன் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோவின் வேண்டுகோளுக்கு அமைய இந்தக் கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.