சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்தார் சோனியா அகர்வால்!!

கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் அதன்பின் ’மதுர’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுக்கோட்டை’, திருட்டுப்பயலே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த சோனியா அகர்வால் அதன்பின் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் விவாகரத்து செய்த 10 ஆண்டுகள் கழித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்னும் மூன்று நாட்களில் திருமணம் என்றும் இதுகுறித்த பிற விவரங்களுக்கு காத்திருங்கள் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் தாலி கட்டுவது போன்ற ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவையும் சோனியா அகர்வால் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார்.

இதனை அடுத்து சோனியா அகர்வாலுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக புரிந்து கொண்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து சோனியா அகர்வால் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது சோனியா அகர்வாலும் அவருடைய நண்பர்களும் இணைந்து திருமணத்தை திட்டம் போட்டு செய்து தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த நிறுவனத்திற்காகத்தான் சோனியா அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார் என்பதும், அவரது திருமணம் இல்லை என்றும் தற்போது தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.