இன்று ஜனாதிபதியின் உரை குறித்து விவாதம்!!

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ஆற்றிய உரை குறித்து இன்று (வெள்ளிக்கிழமை)  நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது.

குறித்த விவாதம் இன்று காலை 9 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

9ஆவது நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான நிகழ்வு நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, அரசியல் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையினை  நிகழ்த்தி இருந்தார்.

இந்நிலையிலேயே புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.