இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு!

 

நாடளாவிய ரீதியில் நாளை (21ஆம் திகதி) முதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

முன்னாக, நாடளாவிய ரீதியில் 04 நாட்களுக்கு நாளாந்தம், ஒரு மணித்தியாலத்திற்கு முழுநாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது நாளை மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டிய மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக 17ஆம் திகதி சுமார் எட்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நாடாளவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.