கடற்கரைகள் மாசடைவு - மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!!

 


கடற்கரைகள் மாசடைவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்கரை மாசடைவை தடுக்கும் வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு தலைமை நீதிபதி ஏ.எம்.எம்.டீ. நவாஸ் மற்றும் சோஹித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர்,மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு மீண்டும் அழைப்பாணை வௌியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.