இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரும் கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 177 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 983 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 39 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை