எஸ்பிபி ஐசியுவில் கிரிக்கெட், டென்னிஸ்


கொரோனா தொற்றிலிருந்து பின்னணி பாடகர் எஸ்பிபி மீண்டுள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று பாதிப்பால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திங்கள் அன்று அப்பாவின் உடல்நிலை குறித்து நல்ல செய்தி வரும் என்று எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.


அதன்படி இன்று வீடியோ வெளியிட்டுள்ள அவர், அப்பாவின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு வெண்டிலேட்டர் அகற்றப்படும் என்று நம்பினோம். ஆனால் அந்த அளவுக்கு இன்னும் அவரது நுரையீரல் தயாராகவில்லை. ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.


இந்த சூழ்நிலையில் பாசிட்டிவா நெகட்டிவா என்பதைவிட நுரையீரல் செயல்பாடு மேம்படுவது தான் முக்கியம். நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருக்கிறது என்றாலும் அதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறது.


வார இறுதியில் அப்பா அம்மாவுடன் அவர்களது திருமண நாளை கொண்டாடினோம். அப்பா ஐ பேடில் நிறைய கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகள் போன்றவற்றைப் பார்த்து வருகிறார். ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் துவங்கப்படுவதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. எழுத்து மூலம் அவர் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.


-கவிபிரியா


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.