இந்திய மீனவரின் உடல் கையளிப்பு; சொந்த ஊரில் தகனம்!

 தீவகக் கடலில் அண்மையில் கரை ஒதுங்கிய இராமேஸ்வரம் மீனவரது உடல் இன்று இலங்கை – இந்திய கடற்படையினர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதை அடுத்து சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த தனிக்கிளாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று போது கார்சன் என்பவர் நிலை தடுமாறி நடுக்கடலில் விழுந்து மாயமானார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை யாழ்ப்பாணம் வேலணை பகுதிக்கு உட்பட்ட, அல்லைப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் குறித்த மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து நேற்று மீனவர் கார்சனின் உடல் யாழ்ப்பாணம் அரச மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இன்று அதிகாலை இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீனவரின் உடலை கப்பல் மூலம் தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்ப காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கிருந்து இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மூலமாக கொண்டு செல்லப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உடல் அவரது சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின் தகனம் செய்யப்பட்டது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.