16 பிக்குகள் தனிமைப்படுத்தலில்

 காலி – அஹங்கம பிரதேசத்திலுள்ள விகாரையின் 16 பிக்குகள் கொரோனா சந்தேகத்தினால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் அண்மையில் மினுவங்கொட பிரதேசத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார்.


கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின் மினுவங்கொட கொரோனா பரவல் ஏற்பட்டதினால் விகாரையிலுள்ள அனைத்து பிக்குமார்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஹபராதுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பமோத சிறிவர்தன கூறினார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.