இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 3,357 குணமடைந்தனர்!

 நாட்டில் இன்றையதினம்  மேலும் 29 கொரோனா தொற்றாளர்கள்  குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில், 15 பேர் லக்கல பல்லேகம வைத்தியசாலையிலிருந்தும், 7 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலிருந்தும், 4 பேர் இரணவில வைத்தியசாலையிலிருந்தும், 3 பேர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,357 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 5,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 1668 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 293 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.