கொவிட்-19 பாதிப்பு- ஜேர்மனியில் ஐந்து இலட்சத்தை தொட்டது!!

 


ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகிறது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் நான்கு இலட்சத்து 98ஆயிரத்து 353பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை மொத்தமாக 10ஆயிரத்து 435பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 732பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும். 76பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 48ஆயிரத்து 718பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் ஆயிரத்து 696பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை மூன்று இலட்சத்து 39ஆயிரத்து 200பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.