விஜய்சேதுபதி விவகாரம் குறித்து பிரபல நடிகர் ரூவீட்!!
முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தவுடன் அவருக்கு திரை உலகம் மற்றும் அரசியல் உலகில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து விஜய் சேதுபதி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்
இந்த நிலையில் விஜய்சேதுபதி ’800’ படத்தில் நடிப்பதால் ஆத்திரமடைந்த நெட்டிசன் ஒருவர் அவருடைய மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பிரபல நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்... அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல...
இது தமிழனின் பண்பும் அல்ல. தமிழ் உணர்வு என்று, வசனம் பேசினால் மட்டும் போதாது, தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம் தான். அதற்காக தரம் தாழ்ந்து, அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது... தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது. மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை முழுமையாக படித்தவர்களுக்கு இது புரியும்..
இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை