கிளிநொச்சியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை குறித்து – ரூபவதி தகவல்!

 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்தோர் என்ற அடிப்படையில் கிளிநொச்சி – கண்டாவளையில் இரண்டு குடும்பங்களும் வட்டக்கச்சியில் ஒரு குடும்பமும்  சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி  மாவட்டச் செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி வளாகத்தில் 18 மாணவர்களும், வெளிக்கண்டல் இராணுவ முகாமில் மூன்று இராணுவ வீரர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் நாளை (07) தெரியவரும்.

பொது மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை எனவும், தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பேணி வருமுன் காக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.