வவுனியா விபத்தில் சாரதி படுகாயம்!


 

வவுனியா ஈரட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சியில் இருந்து வவுனியா  நோக்கி பயணித்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் அதே திசையில் பயணித்த பிறிதொரு டிப்பர் வாகனம் பின்பக்கமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக ஈரற்பெரிய குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.