மாற்றுத்திறனாளி முன்னாள் போராளி மீது கிளிநொச்சி காவல்துறை தாக்குதல்!

 இலங்கைத் தமிழரகசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான, ஜெசிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து நேற்றைய தினம்

தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

ஜெயக்குமார் ஒரு முன்னாள் போராளி ,மாற்றுத்திறனாளி என்பதுடன் அவர் ஒரு சந்தை வர்த்தகரும் கூட குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வாணிபத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது,சிவில் உடையில் இருந்த பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான ஜெசிந்தன் இழுத்து விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட ஜெசிந்தன் தலமையிலான பொலிஸ் குழுவினர் சந்தை வர்த்தகர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்திச் சென்றிருந்தனர்.

மீண்டும் 5 நிமிடத்தில் வந்த அவர்கள் ஜெயக்குமாரிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை என கேட்டுள்ளார்கள்.

நண்பகல் என்பதால் நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள் கடையை இப்படியே விட்டு செல்ல முடியாது அதனை விட ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி எனது உதவியாளர் வருகைக்காக காத்திருக்கின்றேன் என பதிலளித்துள்ளார்.

உனக்கு கடைக்கு போய் வாங்குவதற்கு என்ன என்று கேட்டவாறு சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாற்றுத்திறனாளியான ஜெயக்குமாரை இழுத்து வீழ்த்தி தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் சந்தை வர்த்தகருமான ஜெயக்குமார் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திலும், மனித உரிமை ஆணைக் குழுவிலும் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.