கிளிநொச்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள்!

 கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பிரிசோதனைகளில்

வெளிவந்த முடிவுகளுக்கு அமைய எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என
தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான யுவதியின் குடும்பத்துடன் தொடர்புபட்டவர்கள், கம்பஹா மாவட்டத்திலிருந்து பல்கலைகழக மற்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தவர்கள் என பலரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் இதுவரை எவருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்துள்ளன.

மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் 57 நபர்களின் முடிவுகள் வெளிவந்த
நிலையில் அவர்கள் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் பொது
மக்கள் தேவையற்ற வகையில் ஒன்று கூடுவது, பொது போக்குவரத்துக்களை
பயன்படுத்துவது, வெளிமாவட்டங்களுக்கு சென்று வருவது போன்றவற்றை
தவிர்க்குமாறும், சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு
அதிகாரிகள் கோரியுள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.