மணல் அகழ்ந்தவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட பனங்காமம் பறங்கியாற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நண்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்தவரே கைதுசெய்யப்பட்டார்.
அவருடைய உழவு இயந்திரத்தை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை