இரண்டு பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

 


2020ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு போல் ஆர்.மில்க்ரோம் மற்றும் ரொபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.


நடப்பு ஆண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மற்ற துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (திங்கட்கிழமை) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் பால் ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.


இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருவருக்கும் பதக்கத்துடன் 10 மில்லியன் சுவீடிஷ் குரோனர் (சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 950,000 யூரோக்கள்) பகிர்ந்தளிக்கப்படுகின்றது.


உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.