50 ற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் அனுமதி!
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் கொரோனா சிகிச்சைக்காக 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் தேவை நிமித்தம் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
அந்தவகையில் கொழும்பில் தங்கி நின்று பணியாற்றிய பல வெளிநாட்டவர்களிற்கும் தற்போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாயில் உள்ள கல்வியல் கல்லூரியில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களில் கொழும்பு மாநகர சபையின் ஒரு ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட 40 இந்திய தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை