யாழில் வாளுடன் சிக்கிய இளைஞன்!


 யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் வாளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுமார் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.