காதலிப்பதாக கூறி அழைத்து கொள்ளையிட்ட கும்பல்!


 இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகம் வாயிலாக இளைஞரை காதலிப்பதாக கூறி, குடியிருப்புக்கு அழைத்து கொள்ளையிட்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட கும்பல் ஒன்றை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொல்லம் பகுதியை சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மற்றும் 21 வயதான அல்த்தாஃப் ஆகியோரே தற்போது பொலிசாரிடம் சிக்கியவர்கள் என கூறப்படுகிறது.

இடப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரை சேரநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புக்கு அழைத்து வந்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளது இந்த கும்பல்.

பின்னர் மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல்போன் உள்ளிட்ட தங்க நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.

ஆனால், அங்கிருந்து தப்பிய இளைஞர் நேரடியாக காவல் நிலையம் சென்று பொலிசாரிடம் நடந்தவற்றை புகாராக அளித்துள்ளார்.

இதனையடுத்து நடந்த விசாரணையிலேயே ரிஸ்வானா மற்றும் அல்த்தாஃப் ஆகிய இருவரும் சிக்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இளைஞரிடம் இருந்து கொள்ளையிட்ட பொருட்களை பொலிசார் மீட்டுள்ளதுடன், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அனுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.