வைத்தியசாலைக்கு சென்ற 17 வயது யுவதிக்கு கொரோனா!


 தங்காலை குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் குடாவெல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி தலைவலி ஏற்பட்டு சிகிச்சை பெறுவதற்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலாவது PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகியது.

இந்நிலையில் வீடு நோக்கி செல்வதற்கு அவர் தயாராகிய போது அவருக்கு இரண்டாவது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய அவர் கம்புருகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.