ஒரு தேக்கரண்டி தான் உலக மக்களின் துயரத்திற்கு காரணம்!


 கொரோனா பெருந்தொற்றின் அளவு உலகம் முழுக்க பரவியிருப்பது என்பது வெறும் ஒரு தேக்கரண்டிக்கும் கொஞ்சம் அதிகம்தான் என நிபுணர் ஒருவர் பகீர் தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த தகவலை கணித மேதையான Matt Parker தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க 54 மில்லியன் மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் இதுவரை 1,324,689 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகமெங்கும் பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கையை ஒரு தேக்கரண்டியில் அள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஒரு தேக்கரண்டியில் 6 மில்லி லிட்டர் திராவகமே அள்ள முடியும், ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் அளவு சுமார் 8 மில்லியன் லிட்டராக இருக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.

அப்படியானால், உலகமெங்கும் இத்தனை குழப்பம், நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, இழப்பு உள்ளிட்டகற்றுக்கு காரணம் அந்த ஒரு தேக்கரண்டி அளவு பெருந்தொற்றே என அவர் கூறியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.