70 குரங்குகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!

 


இந்தியாவில் 70 குரங்குகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஷனிகாபூரம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் கொத்து கொத்தாக குரங்குகள் இறந்து கிடந்தன.

குரங்குகள் அனைத்தும் பைகளுக்குள் வைக்கப்பட்டு அங்கு தூக்கி வீசப்பட்டு கிடந்தன.

அங்கிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால் கிராம மக்கள் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பொலிசார் 70 குரங்களின் சடலங்களை கைப்பற்றி அதை எரித்தனர். விசாரணையில் குரங்குகள் அனைத்துக்கும் மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

நிச்சயம் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவோம் என வனத்துறை அதிகாரிகளும், பொலிசாரும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் குரங்குகள் வயல்வெளிகளுக்குள் புகுந்து பயிரை நாசம் செய்வதால் விவசாயிகள் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.